தியேட்டரில் விற்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் கிடந்த "பல்லி" - உணவு பாதுகாப்புத் துறை விசாரணை

0 2775

புதுச்சேரியில் உள்ள முருகா திரையரங்கில் விற்பனை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலில் பல்லி இறந்து கிடந்ததாக கூறி சிலர் கேண்டீன் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நேற்றிரவு திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற ஒரு குடும்பத்தினர் கேண்டீனில் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளனர். பாட்டிலை திறந்து சிறிது தண்ணீரை குடித்ததும் அதில் பல்லி கிடந்ததை அறிந்த பெண், ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பல்லி கிடந்த தண்ணீரை குடித்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments